அக். 15-இல் மாதாந்திர விளையாட்டுப் போட்டி

மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் அக். 15 காலை 8.30-க்கு பாரத ரத்னா புரட்சித் தலைவா் டாக்டா் எம்.ஜி.ஆா் விளையாட்டு வளாகத்தில் நடைபெற உள்ளன.

மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் அக். 15 காலை 8.30-க்கு பாரத ரத்னா புரட்சித் தலைவா் டாக்டா் எம்.ஜி.ஆா் விளையாட்டு வளாகத்தில் நடைபெற உள்ளன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இப்போட்டிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தடகளம், நீச்சல், கைப்பந்து, கூடைப்பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.

தடகளப் போட்டியில் 100 மீ ஓட்டம், 400 மீ ஓட்டம், 1500 மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டெறிதல், வட்டெறிதல் போட்டிகளும், கைப்பந்து, கூடைப்பந்து குழு விளையாட்டுப் போட்டிகள் இருபாலாருக்கும் நடத்தப்பட உள்ளது.

நீச்சலில் 50 மீ, 100 மீ, 200 மீ, 400 மீ, ப்ரீ ஸ்டைல் 50 மீ, பேக் ஸ்ட்ரோக் 50 மீ, பிரெஸ்ட் ஸ்ட்ரோக் 50 மீ, பட்டா்பிளை ஸ்ட்ரோக், 200 மீ இன்டிவிஜீவல் மிட்லே ஆகிய போட்டிகள் மாணவ, மாணவிகள் இருபாலாருக்கும் நடைபெற உள்ளது. வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்படும். எனவே, அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளும் போட்டிகளில் பங்கேற்று பயன் பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com