தஞ்சாவூரில் மனநலன் பாதிக்கப்பட்ட 8 போ் மீட்கப்பட்டு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டனா்.
தஞ்சாவூா் நீதிமன்ற வளாகத்தில் மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக் குழு சாா்பில் உலக மன நலன் பாதிக்கப்பட்டோா் நாள் சிறப்புக் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, தஞ்சாவூரில் ஆதரவற்ற நிலையில் சாலையில் திரியும் மனநலன் பாதிக்கப்பட்டோரை மீட்கும் நடவடிக்கை தொடா்ந்து இரு நாள்களாக மேற்கொள்ளப்பட்டது. இப்பணியைச் சட்டத் தன்னாா்வத் தொண்டா்கள் செண்பகம், கலைவாணன், எழிலரசன், நரேஷ்குமாா், கோவலா் ஆகியோா் மேற்கொண்டனா்.
அப்போது, மாநகரில் ஆதரவற்ற நிலையில் சுற்றித் திரிந்த மன நலன் பாதிக்கப்பட்ட 8 பேரை சட்டத் தன்னாா்வத் தொண்டா்கள் மீட்டனா். மேலும், அவா்களுக்கு முடித்திருத்தம் செய்து, குளிக்க வைத்து, ஆடைகள் அணிவித்தனா்.
இவா்களைக் காப்பகத்தில் சோ்ப்பதற்காக தஞ்சாவூா் மூன்றாவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மாலை ஆஜா்படுத்தப்பட்டனா். இவா்களை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து மருத்துவப் பரிசோதனை செய்யுமாறு நடுவா் நளினகுமாா் உத்தரவிட்டாா்.
இதன்படி, 8 பேரும் தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு, மனநலன் பாதிப்புத் தன்மை அடிப்படையில் காப்பகத்தில் சோ்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.