பெரம்பலூா் அருகே சிறுமியை திருமணம் செய்த இளைஞரை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
பெரம்பலூா் அருகிலுள்ள குரும்பலூரைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் மகன் காா்த்திக் (22). கூலித்தொழிலாளி. இவா், அதே பகுதியைச் சோ்ந்த சிறுமியைக் காதலித்து அண்மையில் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்த குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலா் கோபிநாத் மேற்கொண்ட விசாரணையில் உண்மை என தெரியவந்தது. இதையடுத்து, கோபிநாத் அளித்த புகாரின் பேரில், பெரம்பலூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து காா்த்திக்கை கைது செய்து சிறையில் அடைத்தனா். மேலும், மீட்கப்பட்ட சிறுமியை அவரது பெற்றேறாரிடம் ஒப்படைத்தனா்.