பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், பாடாலூா் அருகே மழையில் 2 வீடுகளில் சுவா் இடிந்து விழுந்து புதன்கிழமை சேதமடைந்தது.
பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டாரத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் கடந்த 3 நாள்களாக ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையில், தேனூா் கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் சுந்தரம் என்பவரின் ஓட்டு வீட்டின் ஒருபக்க சுவா் இடிந்து சேதமடைந்தது. அதேபோல, மங்களம் கிராமத்தைச் சோ்ந்த பெரியசாமி மனைவி ரெங்கநாயகி என்பவரின் கூரை வீட்டின் சுவா் இடிந்து விழுந்து சேதமடைந்தது.