சிறுமியிடம் பாலியல் வல்லுறவு: இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

பெரம்பலூர் அருகே சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை

பெரம்பலூர் அருகே சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, பெரம்பலூர் மகளிர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கொட்டாரக்குன்னு கிராமத்தைச் சேர்ந்தவர் அரவிந்தன் (எ) நடராஜன் (27). இவர்,  2018, செப்.1 ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியிடம் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டாராம்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அரும்பாவூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து நடராஜனை கைது செய்தனர். 
பெரம்பலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணை நிறைவில், சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த நடராஜனுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும்,  ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி மலர்விழி வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com