பெரம்பலூரில் ரத்த தான முகாம்

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே, மாவட்ட டிஜிட்டல் புகைப்படம் மற்றும் ஒளிப்பதிவாளர் தலைமை சங்கம், விக்டரி அரிமா சங்கம்,


பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே, மாவட்ட டிஜிட்டல் புகைப்படம் மற்றும் ஒளிப்பதிவாளர் தலைமை சங்கம், விக்டரி அரிமா சங்கம், சுப்ரீம் அரிமா சங்கம், நகர அரிமா சங்கம் மற்றும் அரசு தலைமை மருத்துவமனை ரத்த வங்கி சார்பில் ரத்த தான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. 
டிஜிட்டல் புகைப்படம், ஒளிப்பதிவாளர் தலைமை சங்க மாவட்டத் தலைவர் டி. குமரவேல் தலைமை வகித்தார். விக்டரி அரிமா சங்கத் தலைவர் ஜி. பாரதிராஜா, சுப்ரீம் சங்கத் தலைவர் கே. செந்தில்குமார், நகர அரிமா சங்கத் தலைவர் ஏ. செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  
அரிமா சங்க சாசனத் தலைவர் கி. முகுந்தன், முகாமை தொடக்கி வைத்து ரத்த தானம் செய்வதன் அவசியம், ரத்த தானம் செய்வதால் ஏற்படும் பயன்கள் குறித்து விளக்கி பேசினார். தொடர்ந்து நடைபெற்ற இந்த முகாமில், அரசு தலைமை மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவக் குழுவினர் மூலம் 100க்கும் மேற்பட்டோரிடம் ரத்த தானம் பெற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com