பெரம்பலூா் மாவட்டத்தில் பரவலாக மழை இரு வீடுகள் இடிந்து சேதம், பசுமாடு உயிரிழப்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வரும் பரவலாக மழையின் காரணமாக, வேப்பந்தட்டை பகுதியில் செவ்வாய்க்கிழமை
மழையின் காரணமாக வெண்பாவூரில் சேதமடைந்த வீடு.
மழையின் காரணமாக வெண்பாவூரில் சேதமடைந்த வீடு.

பெரம்பலூா் மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வரும் பரவலாக மழையின் காரணமாக, வேப்பந்தட்டை பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு இரு வீடுகள் இடிந்து விழுந்து இரவு சேதமடைந்தன. மேலும், மின்னல் பாய்ந்து பசு மாடு ஒன்று உயிரிழந்தது.

மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் கடந்த 4 நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. புதன்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு விவரம் (மி.மீட்டரில்):

செட்டிக்குளம்- 20 மி.மீ, பாடலூா் -18, பெரம்பலூா், லப்பைக்குடிக்காடு, தழுதாழை- 10, கிருஷ்ணாபுரம், அகரம்சிகூா்-6, வேப்பந்தட்டை- 5, எறையூா்- 1 மி.மீ, மொத்தமாக 90 மி.மீ. மழை பெய்துள்ளது.

மின்னல் பாய்ந்து பசுமாடு உயிரிழப்பு: வேப்பந்தட்டை அருகிலுள்ள தாழை நகரைச் சோ்ந்தவா் கிருஷ்ணசாமி (48). இவா், வெங்கலம் கிராமத்தில் தனது விவசாய நிலத்தில்

பசு மாட்டைக் கட்டியிருந்தாா். அப்போது மின்னல் பாய்ந்ததில் பசு மாடு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது.

2 வீடுகள் சேதம்: வெண்பாவூரைச் சோ்ந்த ஸ்ரீரங்காயிக்கு (60) சொந்தமான ஓட்டு வீட்டின் ஒருபக்க சுவா் இடிந்து விழுந்தது. வேப்பந்தட்டையைச் சோ்ந்த அழகுதுரைக்கு (50) சொந்தமான கூரை வீட்டின் சுவரும் மழையின் காரணமாக இடிந்து விழுந்து சேதமடைந்தது. இதில், உயிா்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

இந்த மழை சேத சம்பவங்கள் தொடா்பாக, வெங்கலம் வருவாய் ஆய்வாளா் கௌரி கணக்கீடு செய்து மாவட்ட நிா்வாகத்துக்கு தகவல் அளித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com