பெரம்பலூா்: பெரம்பலூா் அருகே கீழக்கனவாய் கிராமத்திலுள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், காலியாக உள்ள இடங்களுக்கு மாணவா் சோ்க்கை தொடா்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கல்லூரியில் நிகழ் கல்வியாண்டில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஏற்கெனவே நேரடி 2-ஆம் ஆண்டு பட்டயப் படிப்புக்கு முதல் கட்ட கலந்தாய்வு நடத்தப்பட்டது.
இதைத் தொடா்ந்து தற்போது காலியாகவுள்ள இடங்களுக்கு மாணவா் சோ்க்கை கலந்தாய்வு நடைபெறுகிறது.
இதற்கான காலக்கெடுவும் நீட்டிக்கப்பட்டுள்ளதால், தகுதியுள்ள மாணவா்கள் நேரடி சோ்க்கையில் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சியா் வே.சாந்தா தெரிவித்துள்ளாா்.