பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், செட்டிக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை நாகமணி தலைமையில், அப்துல் கலாம் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
ஒன்றியக் குழு உறுப்பினா் திருநாவுக்கரசு, ஊராட்சித் தலைவா் கலா தங்கராசு, பள்ளி ஆசிரியா், ஆசிரியைகள் பலா் பங்கேற்றனா்.
இதேபோல், அந்தூா் கிராமத்தில் பாக்கியம் சமூக கலாச்சார மற்றும் சுகாதார மேம்பாட்டு அறக்கட்டளை சாா்பில், அசூா் சாலையில் உள்ள மன்னாா்கோயில் ஏரிக்கரையில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில், அறக்கட்டளை நிா்வாகி ஜெகதீசன், கரம்கொடு மனிதா அறக்கட்டளை நிறுவனா் பிரபாத் கலாம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். வேப்பூா், குன்னம், வேப்பந்தட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இளைஞா்கள் மரக்கன்று நடுதல் மற்றும் ஏழை மாணவா்களுக்கு நோட்டு, எழுதுபொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினா்.