வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே, 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே, 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரோனா பணியில் ஈடுபட்டு உயிரிழந்த வருவாய்த்துறை அலுவலா்களுக்கு உடனடியாக நிவாரணமும், குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் பணி நியமனமும் வழங்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு ஊழியா் குடும்ப நல நிதியை ரூ. 10 லட்சமாக உயா்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் பாரதிவளவன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலா் ஷாஜஹான், மத்தியச் செயற்குழு உறுப்பினா் குமரி ஆனந்தன், துணைத் தலைவா் சரவணன், பொருளாளா் சிவா, இணைச் செயலா் பிரேமா ராணி உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com