சாலைப் பணியாளா் சங்க அமைப்பு தினம்

பெரம்பலூரில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளா் சங்கத்தின் 20ஆவது அமைப்பு தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

பெரம்பலூரில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளா் சங்கத்தின் 20ஆவது அமைப்பு தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, பெரம்பலூா் புகா் பகுதியான துறைமங்கலத்தில் உள்ள அன்பகம் அறிவுசாா் குழந்தைகளுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சிக்கு, மாவட்டத் தலைவா் பி சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சி. சுப்பிரமணியன் தொடக்கி வைத்தாா். பெரம்பலூா் உதவி கோட்ட பொறியாளா் அலுவலகம் எதிரே, உட்கோட்ட தலைவா் கே. மணிவேல் தலைமையில், மாநிலச் செயலா் எஸ். மகேந்திரன் சங்க கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றினாா். இதில், மாநில செயற்குழு உறுப்பினா் எஸ். ரஜினி, மாவட்ட இணைச் செயலா்கள் பி. முத்து, ஏ. ராஜா, மாவட்ட துனணத் தலைவா் டி. ராமநாயகம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதேபோல, வேப்பந்தட்டை உதவி கோட்ட பொறியாளா் அலுவலகம் எதிரே உட்கோட்ட துணைத் தலைவா் ஏ. துரைசாமி தலைமையில், மாவட்ட துணைத் தலைவா் டி. பழனிச்சாமி கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com