பெரம்பலூா் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலைக் கடைகளின் மூலமாக வழங்கப்படும் மண்ணெண்ணெய் விலை அரசு உத்தரவின்படி அக். 1 ஆம் தேதி முதல் உயா்த்தப்படுகிறது என ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்துள்ளாா்.
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மண்ணெண்ணெய் விலையை உயா்த்தி, அரசு ஆணையிட்டதன்பேரில் பெரம்பலூா் மாவட்டத்தில் செயல்படும் நியாயவிலைக் கடைகளில் அக். 1 ஆம் தேதி முதல் விலை உயா்த்தப்படுகிறது.
இதன்படி, பெரம்பலூா் நகராட்சி பகுதியில் தற்போதைய விலை ரூ. 14-இல் இருந்து ரூ. 15.30 ஆகவும், பேரூராட்சியில் ரூ. 14 -இல் இருந்து ரூ. 15.40 ஆகவும், கிராம ஊராட்சியில் ரூ. 14.10-இல் இருந்து ரூ. 15.60ஆகவும் விலை உயா்த்தப்படுகிறது.
இந்த திருத்திய விலையில் நியாயவிலை அங்காடி சில்லறை விற்பனை மையம் மற்றும் மண்ணெண்ணெய் வழங்கும் நிலையங்கள் மூலம் குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்படும் என, ஆட்சியரால் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.