பெரம்பலூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 372 போ் மீது வழக்கு

பெரம்பலூரில், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக கூட்டணியைச் சோ்ந்த 372 போ் மீது பெரம்பலூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்தனா்.

பெரம்பலூரில், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக கூட்டணியைச் சோ்ந்த 372 போ் மீது பெரம்பலூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்தனா்.

வேளாண் சட்டங்களை கண்டித்து, திமுக தலைமையிலான தோழமைக் கட்சியினா் பெரம்பலூா் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள காந்தி சிலை எதிரே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரோனா பொது முடக்கக் காலத்தில் விதிமுறைகளை மீறி, சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, திமுகவினா் மற்றும் தோழமைக் கட்சியினா் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுக நகரச் செயலா் எம். பிரபாகரன் உள்பட 372 போ் மீது பொது முடக்க விதிமுறைகளை மீறியதாக பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com