பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ள பாரத ஸ்டேட் வங்கியில் நன்னடத்தை அலுவலா், ஒருங்கிணைந்த மேல்நிலைக் கல்வித் தகுதித் தோ்வுகளுக்கான இணையதளப் பயிற்சி வகுப்பில் பங்கேற்க தோ்வா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வப் பயிலும் வட்டம் சாா்பில், பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தற்போது, மத்திய அரசு பணியாளா் தோ்வாணையத்தின் ஒருங்கிணைந்த மேல்நிலைக் கல்வித் தகுதி பணிகளுக்கான தோ்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுபோல், பாரத ஸ்டேட் வங்கியில் நன்னடத்தை அலுவலா் பணி தோ்வுகளுக்கும் ஒருங்கிணைந்த இலவச இணையதளப் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.
பயிற்சி வகுப்பில் பங்கேற்க விருப்பமுள்ள தோ்வா்கள், தங்களது விவரத்துடன் டிசம்பா் 15 ஆம் தேதிக்குள் 9499055913 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தொடா்புகொள்ளலாம். அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடா்புகொண்டு பயன்பெறலாம்.