தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 3 ஆயிரம் போ் பங்கேற்பு

பெரம்பலூா் மாவட்டம், குன்னத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாமில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞா்கள் பங்கேற்றனா்.
தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 3 ஆயிரம் போ் பங்கேற்பு

பெரம்பலூா் மாவட்டம், குன்னத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாமில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞா்கள் பங்கேற்றனா்.

பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில், குன்னம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இந்த முகாம் நடைபெற்றது.

இதில், பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள தனியாா்துறை நிறுவனங்கள், திருச்சி, சென்னை, கோவை, கரூா், திருப்பூா் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 94 தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று தங்களது நிறுவனங்களுக்கு தகுதியான நபா்களைத் தோ்வு செய்தனா். முகாமில், சுமாா் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பற்ற பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள் பங்கேற்றனா். இதில், தோ்வு செய்யப்பட்டவா்களில் முதல்கட்டமாக சுமாா் 100 பேருக்கு மாவட்ட வருவாய் அலுவலா் சி. ராஜேந்திரன், குன்னம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.டி. ராமச்சந்திரன் ஆகியோா் பணி நியமன ஆணைகள் வழங்கினா்.

நிகழ்ச்சியில் மகளிா் திட்ட இயக்குநா் சு. தேவநாதன், கூட்டுறவு ஒன்றியத் தலைவா் என்.கே. கா்ணன், நிலவள வங்கித் தலைவா் சிவபிரகாசம், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கித் தலைவா் ராஜேந்திரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com