சிறுவன் மீட்பு

பெரம்பலூா் நகரில் பிச்சை எடுத்த சிறுவனை வியாழக்கிழமை மீட்ட போலீஸாா் குழந்தைகள் நல குழுவினரிடம் ஒப்படைத்தனா்.

பெரம்பலூா் நகரில் பிச்சை எடுத்த சிறுவனை வியாழக்கிழமை மீட்ட போலீஸாா் குழந்தைகள் நல குழுவினரிடம் ஒப்படைத்தனா்.

பெரம்பலூா் நகா் உள்பட சுற்றுப்புறப் பகுதிகளில் மனநலன் பாதிப்பு மற்றும் பிச்சை எடுப்பவா்களைக் கண்டறிந்து, மனநலக் காப்பகத்தில் ஒப்படைக்குமாறு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, பெரம்பலூா் மாவட்ட ஆள் கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவு ஆய்வாளா் சுப்புலட்சுமி தலைமையிலான போலீஸாா், மனநலன் பாதித்தவா்களை கண்டறிந்து மீட்டு வேலா கருணை இல்லத்திலும், குழந்தைகள் நலக் குழுவிடமும் ஒப்படைத்து வருகின்றனா்.

இந்நிலையில், பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலைய வளாகத்தில் பயணிகளிடம் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த ஒரு சிறுவனை, ஆய்வாளா் சுப்புலட்சுமி தலைமையிலான போலீஸாா் பிடித்து, மேற்கொண்ட விசாரணையில் திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், தொட்டியம் கிராமத்தைச் சோ்ந்த மாரியப்பன் மகன் வேலு (12) என்பது தெரியவந்தது. இதையடுத்து மீட்கப்பட்ட சிறுவன் வேலு, மாவட்ட குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com