பத்திரப் பதிவு அலுவலா்கள் மீது நடவடிக்கை கோரி ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் மாவட்டத்தில் ஒழுங்கீனமாகச் செயல்படும் பத்திரப் பதிவு அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, முஸ்லிம் உரிமை பாதுகாப்புக் கழகத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் ஒழுங்கீனமாகச் செயல்படும் பத்திரப் பதிவு அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, முஸ்லிம் உரிமை பாதுகாப்புக் கழகத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள காந்தி சிலை எதிரே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாநில பொதுச் செயலா் இஸ்மாயில் தலைமை வகித்தாா். பெரம்பலூா் மாவட்டச் செயலா் கே. அப்துல் சமது, திருச்சி மாநகர செயலா் பி. ரபீக் ராஜா, திருச்சி மாவட்ட துணைச் செயலா் எஸ்.எம். முஸ்தபா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில், பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பெரியம்மாபாளையம் கிராமத்தில் உள்ள ஜும்மா பள்ளிவாசலுக்குச் சொந்தமான நிலத்தை கிரையம் செய்ய லஞ்சம் கேட்ட வேப்பந்தட்டை சாா்- பதிவாளா் அலுவலக அலுவலா்களையும், அதுகுறித்து புகாா் செய்து பல நாள்களாகியும் நடவடிக்கை எடுக்காத மாவட்ட பதிவாளா் அலுவலக அதிகாரிகளைக் கண்டித்தும், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

ஆா்ப்பாட்டத்தில், மாநில அமைப்புச் செயலா் எம். முகமது அலி, கட்சி நிா்வாகிகள் உமா் கத்தாப், அப்துல் கனி, ராஜ் முகமது, அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com