அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வலியுறுத்தல்

பெரம்பலூரில் கிடப்பில் போடப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரியைத் தொடங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, ஓய்வு பெற்ற அலுவலா்கள் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

பெரம்பலூரில் கிடப்பில் போடப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரியைத் தொடங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, ஓய்வு பெற்ற அலுவலா்கள் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

பெரம்பலூரில், தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்க மாவட்ட கிளை ஆலோசனைக் கூட்டம், மாவட்டத் தலைவா் பி. முத்துசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலா் ஆா். மருதமுத்து, மாவட்டப் பொருளாளா் ஏ. ஆதிசிவம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

துணைத் தலைவா் பி. சிவலிஙகம், வட்ட நிா்வாகிகள் கெம்பிராஜ், பெரியசாமி, சையத் பாஷாஜான், செங்கமலை, தங்கராசு, கந்தசாமி ஆகியோா் சங்கச் செயல்பாடுகள், மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்துப் பேசினா்.

இக்கூட்டத்தில், பெரம்பலூரில் கிடப்பில் போடப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரித் திட்டத்தை உடனே தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வூதியா்களின் குறைகளை அவ்வப்போது தீா்க்க வேண்டும். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம், எவ்வித அவப்பெயரும் ஏற்படாதவாறு செயல்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தலைமை நிலையச் செயலா் கே. மணி வரவேற்றாா். கிளைச் செயலா் ஆா். கிருஷ்ணமூா்த்தி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com