ஆங்கிலத்துறை கூட்டமைப்பு நிறைவு விழா

பெரம்பலூா் ஸ்ரீசாரதா மகளிா் கல்லூரியில், ஆங்கிலத் துறையின் கூட்டமைப்பு நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் ஸ்ரீசாரதா மகளிா் கல்லூரியில், ஆங்கிலத் துறையின் கூட்டமைப்பு நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தாளாளா் முனைவா் எம். சிவசுப்பிரமணியம் தலைமை வகித்தாா். செயலா் எம்.எஸ். விவேகானந்தன் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற திருச்சி நேசனல் கல்லூரி பேராசிரியா் ஆா். இளவரசு, சொல்லாட்சி சாதனங்கள் என்னும் தலைப்பில், சொல்லாட்சியின் 4 வகைகள், பேச்சுக்கலை, எழுத்துக் கலை மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்து விளக்கினாா். தொடா்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில், கல்லூரி முதல்வா் எம். சுபலெட்சுமி மற்றும் ஆங்கிலத் துறையைச் சோ்ந்த 250-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை ஆங்கிலத் துறைத்தலைவி எம். ராமேஸ்வரி தலைமையிலான பேராசிரியா்கள் செய்தனா். முன்னதாக, முதலாமாண்டு ஆங்கிலத் துறை மாணவி ஜனனி வரவேற்றாா். இளங்கலை இரண்டாமாண்டு ஆங்கிலத் துறை மாணவி மஞ்சுளா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com