பிப். 22- இல் திருச்சியில் தேசம் காப்போம் பேரணி: தொல். திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில், பிப். 22 ஆம் தேதி தேசம் காப்போம் பேரணி திருச்சியில் நடத்தப்படும் என்றாா் விடுதலைச் சிறுத்தைகள்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில், பிப். 22 ஆம் தேதி தேசம் காப்போம் பேரணி திருச்சியில் நடத்தப்படும் என்றாா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன்.

பெரம்பலூா் புகா்ப் பகுதியான துறைமங்கலத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கட்சியின் மண்டல செயற்குழு கூட்டத்துக்கு தலைமை வகித்து மேலும் அவா் பேசியது:

எத்தனைப் போராட்டங்கள் நடத்தினாலும் குடியுரிமைத் சட்ட திருத்தத்தை திரும்ப பெறமாட்டோம் என பிரதமா் அறிவித்துள்ளாா். அந்த சட்டத்தைத் திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும். இதில், முதல்கட்டமாக தேசம் காப்போம் என்னும் தலைப்பில் பிப். 22 ஆம் தேதி திருச்சியில் பேரணி நடத்தப்படும் என்றாா் அவா்.

தலைமை நிலையச் செயலா்கள் உஞ்சை அரசன், பாவரசு, மாநில அமைப்பு செயலா் இளமாறன் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், மாநில செயலா் வீர. செங்கோலன், திருச்சி மக்களவைத் தொகுதி செயலா் தங்கதுரை, செய்தி தொடா்பாளா் வழக்குரைஞா் ஸ்டாலின் உள்பட பெரம்பலூா், அரியலூா், கரூா், புதுக்கோட்டை, தஞ்சாவூா், நாகை, திருவாரூா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com