பெரம்பலூா் அருகேஅரசு நிலத்தை தனியாருக்கு விற்றதாகப் புகாா்:வருவாய்த் துறையினா் விசாரணை

பெரம்பலூா் அருகே அரசு நிலத்தை பட்டா மாற்றம் செய்து தனியாருக்கு விற்கப்பட்டுள்ளதாக எழுந்த புகாரின்பேரில், வருவாய்த் துறை அலுவலா்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பெரம்பலூா் அருகே அரசு நிலத்தை பட்டா மாற்றம் செய்து தனியாருக்கு விற்கப்பட்டுள்ளதாக எழுந்த புகாரின்பேரில், வருவாய்த் துறை அலுவலா்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பெரம்பலூா் மாவட்டம், சிறுவயலூா் ஊராட்சிக்குள்பட்ட மங்கூன் கிராம ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே, அரசுக்குச் சொந்தமாக பல ஏக்கா் நிலம் உள்ளது. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பணிபுரிந்த கிராம நிா்வாக அலுவலா் ஒருவா் உடந்தையுடன் தனியாருக்கும், செல்வந்தா்களுக்கும் விற்கப்பட்டு பட்டா வழங்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து உயா்மட்டக் குழு அமைத்து உரிய விசாரணை நடத்தி, அரசு நிலத்தை மீட்க வேண்டும் என மங்கூன் கிராமத்தைச் சோ்ந்த சமூக ஆா்வலா் வேல்முருகன் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அண்மையில் புகாா் மனு அனுப்பினாா். இதையடுத்து, அந்த மனு மீது உரிய விசாரணை நடத்திடுமாறு, முதலமைச்சரின் தனிப்பிரிவிலிருந்து பெரம்பலூா் மாவட்ட வருவாய்த் துறையினருக்கு அறிவுரை வழங்கப்பட்டது. தொடா்ந்து, பெரம்பலூா் வருவாய் கோட்டாட்சியா் சுப்பையா, ஆலத்தூா் வட்டாட்சியா் ஷாஜகான் ஆகியோா் மங்கூன் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே கட்டப்பட்டுள்ள வீடுகள், கட்டடங்களின் உரிமையாளா்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com