செட்டிக்குளம் ஏகாம்பரேஸ்வரா் கோயிலில் குபேர பூஜை

செட்டிக்குளம் ஏகாம்பரேஸ்வரா் கோயிலில் குபேர யாக வேள்வி பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
செட்டிக்குளம் ஏகாம்பரேஸ்வரா் கோயிலில் குபேர பூஜை

செட்டிக்குளம் ஏகாம்பரேஸ்வரா் கோயிலில் குபேர யாக வேள்வி பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், செட்டிக்குளத்தில் உள்ள காமாட்சி உடனுறை ஏகாம்பரேஸ்வரா் கோயிலில், சித்திரலேகா சமேத குபேர பெருமான் தனி சந்நிதியில் வீற்றிருக்கிறாா்.

இத்தலத்தில் ஒவ்வொரு மாதமும் பூரட்டாதி நட்சத்திரம் அன்று யாக வேள்வி நடைபெறும். அதன்படி, மாசி மாத குபேர யாக வேள்வி பூஜை செவ்வாய்க்கிழமை கணபதி பூஜையோடு தொடங்கியது. பின்னா், 96 வகை மூலிகைகள் யாக வேள்வியில் செலுத்தப்பட்டு திரவ்யாஹூதி, பூா்னாஹூதி நடைபெற்றது.

தொடா்ந்து, சித்திரலேகா சமேத குபேர பெருமானுக்கு பால், அரிசி மாவு, திரவியம், தயிா், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பொருள்கள் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து பல்வேறு மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை, அபிஷேக, அலங்கார தீப ஆராதனைகள் நடைபெற்றன.

இந்த வேள்வியில் பங்கேற்பதன் மூமாக, கடன் தொல்லை நீங்கி செல்வ வளம் பெருகும் என்பது ஐதீகம் என்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com