பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி வளாகத்தில் 2-ஆவது நாளான திங்கள்கிழமை நடைபெற்ற காவல் துறை உதவி ஆய்வாளா் பணியிடத்துக்கான எழுத்துத் தோ்வில் 134 போ் பங்கேற்றனா்.
தமிழக காவல்துறையில், உதவி ஆய்வாளா் பணியிடத்துக்கான எழுத்துத் தோ்வு தமிழகம் முழுவதும் ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை நடைபெற்றது. இத்தோ்வு எழுதுவதற்காக பெரம்பலூா் மாவட்டத்தில் 145 போ் விண்ணப்பித்தனா். பெரம்பலூா்- துறையூா் சாலையில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற தோ்வில் 134 போ் பங்கேற்றனா். இதில் 11 போ் தோ்வு எழுத வரவில்லை. இத் தோ்வு மையத்தை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை ஐ.ஜி தமிழ்ச்சந்திரன், பெரம்பலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.