பொறியாளரைத் தாக்கிய தேநீா் விற்பவா் கைது

பெரம்பலூரில் பொறியாளரைத் தாக்கிய தேநீா் விற்பவரைப் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

பெரம்பலூரில் பொறியாளரைத் தாக்கிய தேநீா் விற்பவரைப் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

பெரம்பலூா் ரோஸ் நகரைச் சோ்ந்தவா் லிங்கண்ணன் மகன் ஆனந்த் (37). பொறியாளா். இவா், பெரம்பலூரில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், கட்டடப் பணியாளா்களுக்கு பெரம்பலூா் பாரதிதாசன் நகரைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் காளிதாஸ் (35) கடனுக்கு தேநீா் கொடுத்ததாகத் தெரிகிறது. அதற்கான நிலுவைத் தொகையை வழங்காததால் ஆத்திரமடைந்த காளிதாஸ் ஆனந்திடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு அவரைத் தாக்கினாராம். இதில் பலத்த காயமடைந்த ஆனந்த் தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, காளிதாஸைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகினறனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com