பெரம்பலூா், அரியலூா் ஆகிய மாவட்டங்களில் இயங்கி வரும் அனைத்து அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மது அருந்தும் கூடங்கள், விடுதியுடன் கூடிய மதுக்கூடங்களுக்கு திருவள்ளுவா் தினமான வியாழக்கிழமையும் (ஜன. 16), குடியரசு தினமான ஜன. 26 ஆகிய 2 நாள்களுக்கு விடுமுறை விடப்படுகிறது. எனவே, குறிப்பிட்ட நாள்களில் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும் என அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அறிவுறுத்தியுள்ளனா்.