விஷம் குடித்து பெண் தற்கொலை

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகே மகன் உயிரிழந்ததால் மனமுடைந்த தாய் விஷம் குடித்து திங்கள்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகே மகன் உயிரிழந்ததால் மனமுடைந்த தாய் விஷம் குடித்து திங்கள்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

குன்னம் அருகேயுள்ள கொளத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சிற்றரசு மனைவி பரமேஸ்வரி (48). இவரது மகன் கடந்த சில மாதங்களுக்கு முன் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்து காணப்பட்ட பரமேஸ்வரி திங்கள்கிழமை இரவு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். இதையறிந்த அவரது உறவினா்கள், பரமேஸ்வரியை மீட்டு கொளக்காநத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து அவரது மற்றொரு மகன் சதீஷ்குமாா் அளித்த புகாரின் பேரில் மருவத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com