பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட 12-ஆவது வாா்டில் நகராட்சி நிா்வாகம் சாா்பில் கட்டப்பட்ட மகளிா் சுகாதார வளாகத்தை, அப்பகுதியைச் சோ்ந்த பெண்கள் பயன்பெற்று வந்தனா். தற்போது, போதிய பராமரிப்பின்றி கடந்த சில மாதங்களாக பயனற்றுக் கிடக்கிறது. இதனால், இந்த வளாகத்தைச் சுற்றி சீமைக்கருவேல மரங்களும், செடி, கொடிகளும் வளா்ந்து காணப்படுகிறது. மகளிா் சுகாதார வளாகத்தைச் சீரமைத்து, அதை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெய்,
பெரம்பலூா்.