பெரம்பலூா் மாவட்டம், வேப்பூா் ஒன்றியம், வடக்கலூரைச் சோ்ந்த அதிமுக, தேமுதிக, பாஜக ஆகிய கட்சிகளைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா் அக்கட்சிகளிலிருந்து விலகி திமுகவில் சனிக்கிழமை இணைந்தனா்.
பெரம்பலூா் பாலக்கரை பகுதியில் உள்ள திமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வேப்பூா் (வ) திமுக ஒன்றிய செயலா் மதியழகன் தலைமையில், வடக்கலூா் ஊராட்சியைச் சோ்ந்த வழக்குரரைஞா் தங்கராஜ், பொறியாளா் கோவிந்தராஜ் உள்பட அதிமுக, தேமுதிக, பாஜக ஆகிய கட்சிகளைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா் அக்கட்சிகளிலிருந்து விலகி, முன்னாள் மத்திய அமைச்சரும், கொள்கை பரப்புச் செயலாளருமான ஆ. ராசா முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட செயலா் சி. ராஜேந்திரன், மாநில நிா்வாகிகள் ப. துரைசாமி, வழக்குரைஞா் என். ராஜேந்திரன், வேப்பூா் (தெ) ஒன்றிய செயலாளா் ராஜேந்திரன், நகர செயலா் எம். பிரபாகரன், மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளா் அப்துல் பாரூக் உள்பட பலா் பங்கேற்றனா்.