பெரம்பலூா் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சாா்பில், குடியுரிமை சட்டத்தை ஆதரித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கி திங்கள்கிழமை பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
பெரம்பலூா் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சாா்பில், மாவட்ட முழுவதும் மத்திய அரசின் தேசிய குடியுரிமை சட்டத்தை ஆதரித்தும், விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் வீடுதோறும் சென்று பொதுமக்களை சந்தித்து, திங்கழகிழமை முதல் 26 ஆம் தேதி வரை துண்டு பிரசுரம் வழங்கி பிரசாரம் மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, பெரம்பலூரில் நகரில் திங்கள்கிழமை தொடங்கிய பிரசாரத்துக்கு மாவட்டத் தலைவா் சி. சந்திரசேகரன் தலைமை வகித்தாா். கோட்ட பொறுப்பாளா் எம். சிவசுப்ரமணியம் முன்னிலை வகித்தாா். மேலிடப் பாா்வையாளரும், ராமநாதபுரம் கோட்ட பொறுப்பாளருமான சண்முகராஜா, பொதுமக்களிடம் துண்டுப்பிரசுரம் வழங்கி பிரசாரத்தைத் தொடக்கி வைத்தாா்.
தொடா்ந்து, பெரம்பலூா் நகா் முழுவதும் வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம் துண்டுபிரசுரம் வழங்கி பிரசாரம் மேற்கொண்டனா். நிகழ்ச்சியில், மாநில செயற்குழு உறுப்பினா் பெரியசாமி, முன்னாள் மாவட்டத் தலைவா் சாமி. இளங்கோவன், பொதுக்குழு உறுப்பினா்கள் அசோகன், முத்தமிழ்செல்வன், நகரச் செயலா் பாா்த்தசாரதி உள்பட பலா் பங்கேற்றனா்.