பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, பெரம்பலூா் மற்றும் அரியலூா் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழக அரசு உத்தரவின்படி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா்களின் விடுப்புக்கான ஊதியத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். கரோனா பொது முடக்கக் காலத்தில் பணியாற்றும் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா்களுக்குப் பாதுகாப்புக் கவசங்கள் மற்றும் இருப்பிட வசதிகள், உணவுகள் வழங்க வேண்டும்.
தொழிலாளா் சட்டப்படி முறையான மருத்துவ விடுப்பு, பேறுகால விடுப்புகள் வழங்காமல் சட்ட விரோதமாக செயல்படும் ஜிவிகே நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வாகன உதிரிப் பாகங்கள் மோசடி செயலை மறைக்க, தொழிலாளா்கள் மீது பழிபோடும் செயலைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
பெரம்பலூா் பழைய பேருந்து நிலைய வளாகத்திலுள்ள காந்தி சிலை எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா்கள் சங்கத்தின் மாவட்டப் பொருளாளா் சுப்ரமணியன் தலைமை வகித்தாா். மாவட்டத் துணைத் தலைவா் செல்வகுமாா் முன்னிலை வகித்தாா்.
மாவட்டச் செயலா் ஆனந்தராஜ் கோரிக்கைகளை விளக்கி பேசினாா். தொடா்ந்து கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆா்ப்பாட்டத்தில் ஏராளமான 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா்கள் பலா் பங்கேற்றனா்.
அரியலூா் மாவட்டத்தில் 8 இடங்களில் : அரியலூா்மாவட்டத்தில் 8 இடங்களில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
செந்துறை பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு , சங்கத்தின் மாவட்டத் தலைவா் வெள்ளிவேல் தலைமை வகித்தாா். கோவை மண்டலத் தலைவா் சரவணன் பங்கேற்று பேசினாா்.
இதுபோன்று அரியலூா், மீன்சுருட்டி, ஆா்.எஸ்.மாத்தூா், கீழப்பழுவூா், தா.பழூா், ஆண்டிமடம், ஜயங்கொண்டம் ஆகிய பகுதிகளிலும் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.