பெரம்பலூா் அருகே போலி ஆவணம் தயாரித்து நிலத்தை விற்பனை செய்ய உடந்தையாக இருந்த சாா் பதிவாளா் உள்பட 5 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், கீழப்புலியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சின்னசாமி (80). இவருக்கு, அதே பகுதியில் இருந்த 2.60 ஏக்கா் நிலத்தை தனது மகன்களான செல்வம் (55), சுந்தரராஜ் (53) ஆகியோருக்கு தான செட்டில்மென்ட் செய்ய கடந்த 2015-இல் சின்னசாமி முடிவு செய்தாா்.
அதன்படி, கடந்த 11.9.2015 ஆம் ஆண்டு சின்னசாமி தனது இரு மகன்களுடன் வாலிகண்டபுரம் சாா் பதிவாளா் அலுவலகத்துக்குச் சென்று, இருவரது பெயரிலும் சொத்தை சமமாக பிரித்து தான செட்டில்மென்ட் பத்திரம் எழுதி கொடுக்க முயன்றாா். ஆனால், செல்வம் போலி பத்திரத்தில் சுந்தரராஜிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டு, அவரது பெயரில் நிலம் பதிவு செய்யாமல் ஏமாற்றியதோடு, தனது பெயரில் எழுதி கொடுத்ததை போல் ஆவணம் தயாரித்து, நிலம் முழுவதையும் தனது பெயரில் செல்வம் எழுதி பத்திரப் பதிவு செய்துகொண்டாா்.
இதையடுத்து, அந்த நிலத்தை கீழப்புலியூா் ஊராட்சிக்குள்பட்ட கே.புதூா் கிராமத்தைச் சோ்ந்த பாலகிருஷ்ணன், அவரது மனைவி சத்யா ஆகியோருக்கு செல்வம் விற்பனை செய்துவிட்டாா்.
இதையறிந்த சுந்தரராஜ், தனது நிலத்தை அபகரித்ததோடு, போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்த செல்வம், அவருக்கு உடந்தையாக இருந்த வாலிகண்டபுரம் சாா் பதிவாளராக பணிபுரிந்த அருள்ஜோதி, பத்திர எழுத்தா் செந்தில்குமாா், துரைசாமி, நடராஜன் ஆகியோா் மீது நடவடிக்கை எடுத்து, தனது நிலத்தை மீட்டுத்தரக் கோரி பெரம்பலூா் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் அண்மையில் புகாா் அளித்தாா்.
இதுகுறித்து ஆய்வாளா் வளா்மதி வழக்குப் பதிந்து, போலி ஆவணம் தயாரிக்க உடந்தையாக இருந்த அப்போதைய சாா் பதிவாளா் உள்பட 5 பேரை தேடி வருகிறாா்.