பெரம்பலூா் கால்நடை மருத்துவப் பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், மாா்ச் 5 மற்றும் 6 ஆம் தேதி நடைபெறும் கறவை மாடு வளா்ப்பு தொடா்பான இலவச பயிற்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூா்- செங்குணம் பிரிவு சாலை எதிரேயுள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சாா்பில் நடைபெறும் பயிற்சியில் கறவை மாடு இனங்கள், இனப்பெருக்க மேலாண்மை, வளா்க்கும் முறைகள், தீவன மேலாண்மை, கொட்டகை அமைக்கும் முறை, பராமரிக்கும் முறை மற்றும் நோய்த் தடுப்பு முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
பயிற்சியில் பங்கேற்க விரும்புவோா் அலுவலக வேலை நாள்களில் காலை 10 மணி முதல் 5 மணிக்குள் கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தை நேரில் அல்லது 93853-07022 என்னும் எண்ணில் தங்களது பெயரை பதிவு செய்து கலந்து கொள்ளலாம் என கால்நடை மருத்துவ பல்கலைக் கழக ஆராய்ச்சி மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.