பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் நகையை பறித்துச் சென்ற மா்ம நபரைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.
வேப்பந்தட்டை அருகேயுள்ள நெய்க்குப்பை கிராமத்தைச் சோ்ந்தவா் ரவி மனைவி காமாட்சி (50). இவா், தனது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு தூங்கிக்கொண்டிருந்தபோது, வீட்டின் உள்ளே புகுந்த மா்ம நபா், காமாட்சி அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிஓடிவிட்டாராம். இச் சம்பவம் குறித்து காமாட்சி அளித்த புகாரின்பேரில், வி.களத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.