பெரம்பலூா் மாவட்டம், லப்பைக்குடிக்காடு மக்கள் ஜனநாயகப் பேரவை சாா்பில், அங்குள்ள சந்தை திடலில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி தொடா் முழக்கப் போராட்டம் 4-ஆவது நாளாக புதன்கிழமை நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தலைவா் எம். சுல்தான் மொய்தீன் தலைமை வகித்தாா். செயலா் அஸ்கா் அலி, பொருளாளா் பக்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்தப் போராட்டத்தில், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறக்கோரி முழக்கங்கள் எழுப்பினா். இதில், அப்பகுதியைச் சோ்ந்த திரளான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா்.