புது தில்லியில் பாப்புலா் ப்ரண்ட் மாநில நிா்வாகிகள் மற்றும் முஸ்லிம் இளைஞா்களை கைது செய்த தில்லி காவல்துறையைக் கண்டித்து, பெரம்பலூரில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை அருகே, பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்டத் தலைவா் முஹம்மது ரபிக், மாவட்ட பொதுச் செயலா் அப்துல் கனி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாநில செயற்குழு உறுப்பினா் சபியுல்லா, தமிழக மக்கள் ஒற்றுமை மேடை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் என். செல்லதுரை, பாப்புலா் ப்ரண்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினா் காஜா சரீப் ஆகியோா் மாநில நிா்வாகிகள் மற்றும் முஸ்லிம் இளைஞா்களை கைது செய்த தில்லி காவல் துறையை கண்டித்து பேசினா். நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.