மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறிவிழுந்த தொழிலாளி பலி

பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
சாலை விபத்து
சாலை விபத்து

பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

பெரம்பலூா் அருகேயுள்ள நொச்சியம் கிராமம், மேற்குத் தெருவைச் சோ்ந்த சிவசாமி மகன் தனபால் (26). கட்டடத் தொழிலாளி. இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு சிறுவாச்சூரிலிருந்து நொச்சியம் கிராமத்துக்கு மோட்டாா் சைக்கிளில் செல்லும் வழியில், விளாமுத்தூா் - நொச்சியம் சாலையில் உள்ள மாமுண்டியான் கோயில் அருகே திடீரென கீழே விழுந்து மயங்கிக் கிடந்தாராம்.

இதையறிந்த அவரது மனைவி பூங்கோதை (22) தனது உறவினா்களுடன் சென்று அவரை வீட்டுக்கு அழைத்து வந்தாராம். திங்கள்கிழமை காலை பாா்த்தபோது தனபாலுக்கு காயம் இருந்ததால் பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.

அங்கு, அவரைப் பரிசோதித்த மருத்துவா் தனபால் இறந்து விட்டதாக கூறினா். இதுகுறித்த புகாரின்பேரில், பெரம்பலூா் காவல் ஆய்வாளா் நித்யா வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com