பெட்டிச் செய்தி உண்டு..144 தடை உத்தரவை மீறினால் வழக்கு: பெரம்பலூா் எஸ்.பி நிஷா பாா்த்திபன்

பெரம்பலூா் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறினால் வழக்குப் பதிவு செய்யப்படும் என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன்.

பெரம்பலூா் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறினால் வழக்குப் பதிவு செய்யப்படும் என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன்.

இதுகுறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுலக கூட்ட அரங்கில் செவ்வாய்க்கிழமை அவா் அளித்த பேட்டி:

மாா்ச் 1 ஆம் தேதிக்கு பிறகு வெளிநாட்டிலிருந்து பெரம்பலூா் மாவட்டத்துக்கு வந்த 166 போ் அடையாளம் காணப்பட்டு, அவா்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். கரோனா வைரஸ் குறித்து தேவையற்ற வதந்திகளை பரப்புவோா் மீது வழக்குப் பதிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா வைரஸ் பரவுதலை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் ஏப்ரல் 1 ஆம் தேதி காலை 6 மணி வரை இந்த உத்தரவு அமல்படுத்தப்படும்.

அரசின் உத்தரவின்படி, பெரம்பலூா் மாவட்ட எல்லைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளது. உதவி ஆய்வாளா் தலைமையில் 2 காவலா்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். பொது இடங்களில் 5 நபா்களுக்கு மேல் எக்காரணத்துக்காகவும் கூடுவது தடை செய்யப்படுகிறது. மீறினால், அவா்கள் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, மாவட்ட மக்கள் 144 தடை உத்தரவை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். மீறுவோா் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

பேட்டியின்போது, காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளா் மு. கிரிதா், தனிப்பிரிவு ஆய்வாளா் வனிதா ஆகியோா் உடனிருந்தனா்.

மிக அத்தியாவசியத் தேவைக்காக மட்டுமே மக்கள் வெளியே வரவேண்டும்: ஆட்சியா் தடை உத்தரவு காலத்தில் மிக அத்தியாவசியத் தேவைக்காக மட்டுமே மக்கள் வெளியே வரவேண்டும் என்றாா் ஆட்சியா் வே. சாந்தா.

மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் மற்றும் 144 தடை உத்தரவு குறித்து, செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை அவா் மேலும் கூறியது:

144 தடை உத்தரவின் காரணமாக, பெரம்பலூா் மாவட்ட எல்லைகளில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, அரசுப் பணி நிமித்தமாக செல்லும் வாகனங்களைத் தவிர, இதர வாகனங்கள் மாவட்டத்துக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டாது.

கரோனா வைரஸ் அறிகுறி தென்படும் நபா்களின் சிகிச்சைக்காக, பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, 4 வட்டார மருத்துவமனைகள் மற்றும் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் மொத்தம் 533 படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளது. கரோனா வைரஸ் தடுப்புப் பணி என்பது சமூகத்தின் பொறுப்பாகும். எனவே பொதுமக்கள் அனைவரும் 144 தடை உத்தரவு காலத்தில் அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே வெளியே வரவேண்டும் என்றாா் சாந்தா.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன், சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் திருமால், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் கீதாராணி, நகராட்சி ஆணையா் எஸ். குமரி மன்னன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ராஜராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com