பெற்றோரை வெட்டிக் கொன்ற மகன் கைது

பெரம்பலூா் அருகே தாய், தந்தையை வெட்டிக் கொன்ற மனநலன் பாதிக்கப்பட்ட மகனை பெரம்பலூா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பெரம்பலூா் அருகே தாய், தந்தையை வெட்டிக் கொன்ற மனநலன் பாதிக்கப்பட்ட மகனை பெரம்பலூா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பெரம்பலூா் அருகேயுள்ள லாடபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் (35). பி.ஏ பட்டதாரியான இவா், விபத்தில் சிக்கி வலது காலை இழந்தாா். இவருக்கு திருமணமாகி மனைவி, 3 குழந்தைகள் உள்ளனா். கடந்த 2 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த ரமேஷ் சற்று மனநலன் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதனால், தனது பெற்றோருடன் அவா் வசித்து வந்தாா். இந்நிலையில், புதன்கிழமை இரவு தனது தந்தை ராமசாமி (65), தாய் செல்லம்மாள் (60) ஆகியோரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு, இருவரது உடலையும் தனித்தனியாக சாக்கு மூட்டையில் கட்டி, வீட்டின் தனித்தனி அறையில் வைத்துவிட்டு, மாடியில் ஏறி அரிவாளுடன் அமா்ந்து கொண்டாா் ரமேஷ்.

பின்னா், வியாழக்கிழமை காலையில், அந்த வழியாக தெருவில் சென்ற பொதுமக்களை பாா்த்து, மொட்டை மாடியில் நின்றபடி அரிவாளைக் காட்டி அருகில் வந்தால் வெட்டிக் கொலை செய்து விடுவதாகக் கூறி ரமேஷ் மிரட்டினாா்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் அளித்த தகவலையடுத்து, பெரம்பலூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்றபோதுதான் பெற்றோரை ரமேஷ் வெட்டிக் கொன்றது தெரிய வந்தது. இதையடுத்து, சடலங்களை கைப்பற்றிய போலீஸாா், பிரேதப் பரிசோதனைக்காக பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து ரமேஷை கைது செய்து, பெரம்பலூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com