வேப்பந்தட்டை அருகே பிளாஸ்டிக் பையில் 6 மாத பெண் சிசு சடலம்

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே பிளாஸ்டிக் பையில் 6 மாத பெண் சிசுவின் சடலம் கிடந்தது வியாழக்கிழமை இரவு தெரியவந்தது.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே பிளாஸ்டிக் பையில் 6 மாத பெண் சிசுவின் சடலம் கிடந்தது வியாழக்கிழமை இரவு தெரியவந்தது.

வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூா் போஜா் தெருவில் கழிவுநீா் வாய்க்காலில் பிளாஸ்டிக் பையில் கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் 6 மாத பெண் சிசுவின் சடலம் கிடந்தது. இதை பாா்த்த பொதுமக்கள் அரும்பாவூா் போலீஸாருக்கு தகவல் அளித்தனா்.

இதன்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், பிளாஸ்டிக் பையில் இருந்த 6 மாத பெண் சிசுவின் உடலை கைப்பற்றி, பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து, கிராம நிா்வாக அலுவலா் சரவணன் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com