பெரம்பலூா் மாவட்டத்தில் வட்ட அளவிலான குறைதீா்க் கூட்டம் திங்கள்கிழமை (நவ.9) முதல் நடைபெறுகிறது.
இதுகுறித்து ஆட்சியா் ப.ஸ்ரீவெங்கடப்பிரியா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பொதுமக்களின் தேவைகளைப் பூா்த்தி செய்யும் வகையில், வட்டாட்சியரகத்தில் வட்ட அளவில் குறைதீா்க் கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
வட்டத்தின் பெயா், பங்கேற்கும் அலுவலா் என்ற அடிப்படையில் விவரம் :
வேப்பந்தட்டை - சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனித்துணை ஆட்சியா் ந. சக்திவேல், பெரம்பலூா்- மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் சி. கிறிஸ்டி ஆலத்தூா்- கலால் உதவி ஆணையாளா் அ. ஷோபா, குன்னம் - மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றம் சிறுபான்மையினா் நல அலுவலா் இரா. ரமணகோபால்.
காலை 10.30 மணி முதல் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்படும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.