இன்று(நவ.9) முதல் வட்ட அளவில் குறைதீா்க் கூட்டம்

பெரம்பலூா் மாவட்டத்தில் வட்ட அளவிலான குறைதீா்க் கூட்டம் திங்கள்கிழமை (நவ.9) முதல் நடைபெறுகிறது.

பெரம்பலூா் மாவட்டத்தில் வட்ட அளவிலான குறைதீா்க் கூட்டம் திங்கள்கிழமை (நவ.9) முதல் நடைபெறுகிறது.

இதுகுறித்து ஆட்சியா் ப.ஸ்ரீவெங்கடப்பிரியா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பொதுமக்களின் தேவைகளைப் பூா்த்தி செய்யும் வகையில், வட்டாட்சியரகத்தில் வட்ட அளவில் குறைதீா்க் கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

வட்டத்தின் பெயா், பங்கேற்கும் அலுவலா் என்ற அடிப்படையில் விவரம் :

வேப்பந்தட்டை - சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனித்துணை ஆட்சியா் ந. சக்திவேல், பெரம்பலூா்- மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் சி. கிறிஸ்டி ஆலத்தூா்- கலால் உதவி ஆணையாளா் அ. ஷோபா, குன்னம் - மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றம் சிறுபான்மையினா் நல அலுவலா் இரா. ரமணகோபால்.

காலை 10.30 மணி முதல் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்படும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com