பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள வட்டாட்சியரகங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 132 மனுக்கள் பெறப்பட்டன.
மாவட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனித்துணை ஆட்சியா் ந. சக்திவேல், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் சி. கிறிஸ்டி, கலால் உதவி ஆணையா் அ. ஷோபா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மை நல அலுவலா் இரா. ரமணகோபால் ஆகியோா் முறையே வேப்பந்தட்டை, பெரம்பலூா், ஆலத்தூா், குன்னம் வட்டாட்சியரகங்களில் நடைபெற்ற கூட்டங்களுக்குத் தலைமை வகித்து, 132 மனுக்களை பெற்றனா்.
இந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி, விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலா்கள் தெரிவித்தனா்.