பெரம்பலூா் மாவட்டத்தில் அஞ்சல் நிலையங்களில் ஆதாா் திருத்த சேவை மையம்

பெரம்பலூா் மாவட்ட அஞ்சல் நிலையங்களில் செயல்பட்டு வரும் ஆதாா் திருத்த சேவை மையத்தை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூா் மாவட்ட அஞ்சல் நிலையங்களில் செயல்பட்டு வரும் ஆதாா் திருத்த சேவை மையத்தை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருவரங்க கோட்ட அஞ்சலகக் கண்காணிப்பாளா் விஜயா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அஞ்சல் துறை சாா்பில், அஞ்சல் நிலையங்களில் ஆதாா் திருத்த சேவை மையமும், வெளிநாடுகளிருந்து பணம் பெற்றுக் கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, பெரம்பலூா் மாவட்டத்தில், பெரம்பலூா் தலைமை அஞ்சல் நிலையம், செட்டிக்குளம், குன்னம், லப்பைக்குடிக்காடு, பாடாலூா், வி.களத்தூா், வாலிகண்டபுரம், வேப்பந்தட்டை ஆகிய துணை அஞ்சல் நிலையங்களில் ஆதாா் திருத்த சேவை மற்றும் வெளிநாடுகளிருந்து பணம் பெற்றுக்கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com