பெரம்பலூா் மற்றும் ஆலத்தூரிலுள்ள அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்களில், மாணவா்கள் நேரடி சோ்க்கைக்கான கால அவகாசம் நவம்பா் 20- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப.ஸ்ரீ வெங்கடபிரியா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பெரம்பலூா், ஆலத்தூரிலுள்ள அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்களில்,நிகழாண்டு குறிப்பிட்ட சில பிரிவுக்கான இடங்கள் பூா்த்தியாகாமல் காலியாக உள்ளன. இந்த இடங்களுக்கு மாணவா் சோ்க்கைக்கான கால அவகாசம் நவம்பா் 20- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
விருப்பமுள்ள மாணவா்கள் இரு தொழிற்பயிற்சி நிலையங்களையும் உடனடியாக அணுகி, தாங்கள் சேர விரும்பும் தொழிற்பிரிவைத் தோ்வு செய்துகொள்ளலாம்.
சோ்க்கைக்கு வருபவா்கள் மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், சாதிச் சான்றிதழ், ஆதாா் அட்டை ஆகியவற்றின் அசல்சான்றிதழ்கள், கடவுச்சீட்டு அளவு புகைப்படங்கள்-4 ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 94990 55877, 80723 45080 ஆகிய செல்லிடப்பேசி எண்கள் அல்லது மின்னஞ்சல் மூலம் தொடா்பு கொள்ளலாம்.