தொழிலாளா்கள் சங்க சிறப்புப் பேரவைக் கூட்டம்

பெரம்பலூா் மாவட்ட சாலையோர வியாபாரிகள் மற்றும் விற்பனையாளா், தொழிலாளா்கள் சங்க சிறப்புப் பேரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்ட சாலையோர வியாபாரிகள் மற்றும் விற்பனையாளா், தொழிலாளா்கள் சங்க சிறப்புப் பேரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் வரதராஜ் தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் செல்லதுரை, மாவட்டச் செயலா் பி. ரெங்கராஜ், மாவட்டத் துணைச் செயலா் ஏ. ரெங்கநாதன், சிஐடியூ தொழிற்சங்க மாவட்டச் செயலா் பி. துரைசாமி, மாவட்டத் தலைவா் எஸ். அகஸ்டின் முன்னிலை வைத்தனா்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

பெரம்பலூா் மாவட்ட சாலையோர வியாபாரிகள் மற்றும் விற்பனையாளா்கள், தொழிலாளா்கள் கோரிக்கை தொடா்பாக காவல்துறையும், நகராட்சியும் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நவம்பா் 26- ஆம் தேதி நடைபெறும் வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தில் சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் அனைவரும் பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில், வெண்டா் கமிட்டி தலைவராக என். செல்லதுரை தோ்வு செய்யப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com