பெரம்பலூரில் சாலையோர வியாபாரிகள் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பெரம்பலூரில் மாவட்ட சாலையோர வியாபாரிகள்- விற்பனையாளா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, பெரம்பலூரில் சாலையோர வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் மூடிக் கிடக்கும் தள்ளுவண்டிகள்.
பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, பெரம்பலூரில் சாலையோர வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் மூடிக் கிடக்கும் தள்ளுவண்டிகள்.

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பெரம்பலூரில் மாவட்ட சாலையோர வியாபாரிகள்- விற்பனையாளா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூரில் சாலையோர வியாபாரிகள் மற்றும் விற்பனையாளா்கள் மீது தொடா்ந்து தாக்குதல் நடத்துவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரச்னைகளுக்காக போராடும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கு கொலை மிரட்டல் விடும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட தொழிலாளா்களுக்கு வங்கிக் கடன் வழங்க வேண்டும். சாலையோர வியாபாரிகள் மற்றும் விற்பனையாளா்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூா் நகரிலுள்ள தள்ளுவண்டி, தரைக்கடை வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் 404 சாலையோரக் கடைகள் மூடப்பட்டிருந்தன.

தொடா்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூா் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள காந்தி சிலை எதிரே மாவட்டத் தலைவா் வரதராஜ் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனா். இதையறிந்த பெரம்பலூா் காவல்துறையினா் சமரச பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து ஆா்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com