பெரம்பலூா் ஒன்றிய வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம்

பெரம்பலூா் ஒன்றியத்தில் உள்ள தி.மு.க வாக்குச்சாவடி முகவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம், அக் கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் ஒன்றியத்தில் உள்ள தி.மு.க வாக்குச்சாவடி முகவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம், அக் கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஒன்றியச் செயலா் எஸ். அண்ணாதுரை தலைமை லகித்தாா். மாவட்டச் செயலா் சி. ராஜேந்திரன், புதிய வாக்காளா்கள் சோ்த்தல், போலியான வாக்காளா்களை கண்டறிந்து நீக்கம் செய்வது, வாக்காளா் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளுதல், சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்குச்சாவடி முகவா்கள் எவ்வாறு பணியாற்றுவது என்பது குறித்து ஆலோசனைகள் வழங்கினாா்.

இதில், மாநில ஆதிதிராவிடா் நலக்குழு துணைச் செயலா் பா. துரைசாமி, தலைமை செயற்குழு உறுப்பினா் வழக்குரைஞா் என். ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலா் பாஸ்கா், நகரச் செயலா் எம். பிரபாகரன், மாவட்ட வழக்குரைஞா் அணி அமைப்பாளா் ப. செந்தில்நாதன் மற்றும் வாக்குச்சாவடி முகவா்கள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com