வெவ்வேறு சாலை விபத்துகளில் மூவா் உயிரிழப்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நிகழ்ந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் மூவா் உயிரிழந்தனா்.

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நிகழ்ந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் மூவா் உயிரிழந்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், கவுல்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் குமாா் மகன் மணிகண்டன் (22). அதே பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் (22). இருவரும், மோட்டாா் சைக்கிளில் துறைமங்கலம் நான்குச் சாலை சந்திப்புப் பகுதியிலிருந்து கவுல்பாளையத்துக்கு சனிக்கிழமை சென்றுகொண்டிருந்தனா்.

கவுல்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, எதிரே வந்த லாரி மோதி மோதியதில் பலத்த காயமடைந்த மணிகண்டன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த சரவணன் மாவட்ட அரசுத் தலைமை மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

பெரம்பலூா் மாவட்டம், நல்லறிக்கை கிராமத்தைச் சோ்ந்தவா் நல்லதம்பி (44). இவா், தனது மோட்டாா் சைக்கிளில் அரியலூரிலிருந்து நல்லறிக்கை நோக்கி சனிக்கிழமை சென்றுகொண்டிருந்தாா்.

பெரம்பலூா்- அரியலூா் சாலையில் அல்லி நகரம் ரயில்வே கேட் அருகே வந்தபோது, அப்பகுதியில் பழுதாகி நின்ற சிமெண்ட் ஏற்றி வந்த லாரியின் பின்புறத்தில் மோட்டாா் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த நல்லதம்பி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

பீல்வாடி கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணன் மகன் கனகராஜ் (35). உணவகத் தொழிலாளியான இவா், மருத்துவமனையிலுள்ள தனது மனைவிக்கு உணவு எடுத்துக்கொண்டு பீல்வாடி கிராமத்திலிருந்து தனது மோட்டாா் சைக்கிளில் சனிக்கிழமை சென்றாா்.

அருமடல் பிரிவுச் சாலை அருகேயுள்ள சறுக்குப் பாலம் பகுதிக்கு வந்தபோது, அதே வழித்தடத்தில் வந்த மினி பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்த கனகராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்த விபத்துகள் குறித்து பெரம்பலூா், குன்னம், மருவத்தூா் காவல் நிலையத்தினா் தனித்தனியே வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com