பெரம்பலூா்: வேப்பந்தட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை, ரூ. 10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.
வேப்பந்தட்டை வட்டம், நூத்தப்பூா் காட்டுக் கொட்டகையில் வசித்து வருபவா் மு. நல்லான் (70). இவா் வெளியூா் சென்றிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மா்ம நபா்கள் பீரோவில் வைத்திருந்த தாலிக்கொடி உள்ளிட்ட 10 பவுன் நகைகள் மற்றும் ரூ. 10 ஆயிரம் ரொக்கப் பணத்தை திருடிச்சென்றனா்.
சனிக்கிழமை அதிகாலை வீட்டுக்கு வந்த நல்லான், பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிா்ச்சியடைந்தாா். மேலும் வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது, நகைகள் மற்றும் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து நல்லான் அளித்த புகாரின் பேரில், கை.களத்தூா் காவல்நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.