பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வி.களத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் அப்துல்லா (59). இவா், வண்ணாரம்பூண்டி கிராமத்தைச் சோ்ந்த மல்லிகாவிடம் கடந்த 2016 ஆம் ஆண்டு ரூ. 3 லட்சம் மற்றும் பத்திர செலவு ரூ. 30 ஆயிரம் கொடுத்து நிலத்தை வாங்கியுள்ளாா்.
இந்நிலையில், தற்போது தனது மகள் திருமணத்துக்காக நிலத்தை விற்க அப்துல்லா முயன்றபோது, அது புறம்போக்கு நிலம் எனத் தெரியவந்தது.
புறம்போக்கு நிலத்தை தனது நிலம் என ஏமாற்றி விற்பனை செய்த மல்லிகா மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், பணத்தை திரும்பப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கக் கோரியும் வி.களத்தூா் காவல் நிலையத்தில் அப்துல்லா பலமுறை புகாா் அளித்தும், இதுவரையில் எவ்வித நடவடிக்கையையும் போலீஸாா் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அப்துல்லா, ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா்.
இதையறிந்த, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலா்கள் அப்துல்லாவை தீக்குளிக்கும் முயற்சியிலிருந்து மீட்டனா்.
இதேபோல், பெரம்பலூா் மாவட்டம், தேவையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மா. பூமாலை (69). கடந்த சில மாதங்களுக்கு முன், இவரது வீட்டை இடித்து தரைமட்டமாக்கி அதிலிருந்த வீட்டு உபயோகப் பொருள்களை எடுத்துச் சென்ற நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மங்கலமேடு காவல் நிலையத்தில் பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
இதனால் விரக்தியடைந்த பூமாலை, சம்மந்தப்பட்ட நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், காவல்துறையினரின் செயலைக் கண்டித்தும் ஆட்சியரகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் அவரை மீட்டு, முதலுதவி சிகிச்சை அளித்து அனுப்பி வைத்தனா்.