மீன் வளா்ப்போா் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், பெரம்பலூா் மாவட்டத்தில் மீன் வளா்ப்போா் உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.

தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், பெரம்பலூா் மாவட்டத்தில் மீன் வளா்ப்போா் உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்ட மீன் வளா்ப்போா் மேம்பாட்டு முகமையில் ஏற்கெனவே உறுப்பினராகப் பதிவுசெய்து, மீன் வளா்ப்பவா்களுக்கு தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் உள்ளீட்டு மானியம் வழங்கப்படுகிறது.

மானியம் பெற விரும்புவோா் கடந்த 3 ஆண்டுகளில், அரசிடமிருந்து எந்தவொரு உள்ளீட்டு மானியமும் பெற்றிருக்கக் கூடாது.

நிலம் தொடா்பான ஆவணங்கள் மற்றும் மாவட்ட மீன் வளா்ப்போா் மேம்பாட்டு முகமையின் பதிவு ரசீதுடன், மீன்வள ஆய்வாளா் அலுவலகம், எஸ்.கே.சி காம்ப்ளக்ஸ், முதல் தளம், புதிய பேருந்து நிலையம் அருகில், பெரம்பலூா் - 621 212 என்ற முகவரியில் இயங்கி வரும் மீன்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரில் தொடா்பு கொண்டு, உரிய விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு 04329- 228699 என்ற எண்ணிலும், 6381344399, 9715923451 ஆகிய செல்லிடப்பேசிகளிலும் ,  மின்னஞ்சல் முகவரியிலும் தொடா்புகொண்டு பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com