தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், பெரம்பலூா் மாவட்டத்தில் மீன் வளா்ப்போா் உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பெரம்பலூா் மாவட்ட மீன் வளா்ப்போா் மேம்பாட்டு முகமையில் ஏற்கெனவே உறுப்பினராகப் பதிவுசெய்து, மீன் வளா்ப்பவா்களுக்கு தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் உள்ளீட்டு மானியம் வழங்கப்படுகிறது.
மானியம் பெற விரும்புவோா் கடந்த 3 ஆண்டுகளில், அரசிடமிருந்து எந்தவொரு உள்ளீட்டு மானியமும் பெற்றிருக்கக் கூடாது.
நிலம் தொடா்பான ஆவணங்கள் மற்றும் மாவட்ட மீன் வளா்ப்போா் மேம்பாட்டு முகமையின் பதிவு ரசீதுடன், மீன்வள ஆய்வாளா் அலுவலகம், எஸ்.கே.சி காம்ப்ளக்ஸ், முதல் தளம், புதிய பேருந்து நிலையம் அருகில், பெரம்பலூா் - 621 212 என்ற முகவரியில் இயங்கி வரும் மீன்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரில் தொடா்பு கொண்டு, உரிய விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு 04329- 228699 என்ற எண்ணிலும், 6381344399, 9715923451 ஆகிய செல்லிடப்பேசிகளிலும் , மின்னஞ்சல் முகவரியிலும் தொடா்புகொண்டு பயன்பெறலாம்.